Sunday, April 28, 2024

பட்டுகோட்டை அரசு மருத்துவமனையை கண்டித்து போராட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் விபத்திற்குள்ளானோர்களை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலர் இறந்துவிடும் நிலை நிலவி வருகிறது.

இந்நிலையை போக்கும் வகையில் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை காலை போராட்டம் நடத்தபோவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று காலை பட்டுகோட்டை அரசு மருத்துவமனையின் அருகாமையில் இளைஞர் கூட்டம் கூட ஆரம்பித்தனர்.
அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்பினால் இளைஞர்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன. இதனையடுத்து, பட்டுகோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகாமையில் இளைஞர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதன் பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...