Saturday, May 4, 2024

சென்னை அருகே முதியோர் இல்லத்தில் கொத்து கொத்தாக உயிர் பலி..!!

Share post:

Date:

- Advertisement -

செங்கல்பட்டு அருகே ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இறந்து போன ஆதரவற்ற முதியவர்களின் உடலை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு அனுப்பி மருந்து தயாரிப்பதற்காக கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஷ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 பேர் வரை மர்மமான முறையில் மரணமடைவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முதியோர் இல்லத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று தாம்பரத்தில் இருந்து வந்துள்ளது. அப்போது, அதில் இருந்து மூதாட்டி ஒருவர் தங்களை காப்பாற்றும் படி சத்தமிட்டுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் வண்டியை நிறுத்திய போது வண்டியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். உள்ளே பார்த்த போது உயிரிழந்த பெண்ணின் சடலத்திற்கு அருகே அன்னம்மாள் என்ற மூதாட்டியும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு முதியவரும் அமர்ந்திருந்தனர். மேலும் அவர்களுடன் காய்கறி மூட்டைகளும் இருந்துள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார் 2 முதியவர்களையும் மீட்டதுடன், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லம் மீது விசாரணை தொடங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதி மக்கள் போலீசாரின் விசாரணையில் போது முதியோர் இல்லத்தில் இறக்கும் முதியவர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு, எலும்புகளில் இருந்து மருந்து தயாரிக்கப்படுவதாகவும், அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துள்ள ஆதரவற்றோர் இல்ல நிர்வாகம், இதனை சட்டப்படி சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் சமூக நலம், சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்டோர் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் 60 பேர் வரை உயிரிழந்து உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...