Tuesday, December 2, 2025

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள கபிணி , கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடகாவில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பி , மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1.90 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் திருச்சி முக்கொம்புவுக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேலும் கொள்ளிடத்தில் இருந்து 1.67 லட்சம் கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் ஸ்ரீரங்கம் அம்மா படித்துறையின் அனைத்து படிக்கட்டுகளும் நீரில் மூழ்கியது.

மேட்டூர் அணையில் இருந்து 1.90 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் சேலம் , நாமக்கல் , ஈரோடு , கரூர் , திருச்சி , தஞ்சாவூர் , புதுக்கோட்டை , திருவாரூர் , அரியலூர் , பெரம்பலூர் , கடலூர் , நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காவிரி கரையோர பகுதிகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் , பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img