அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப்(ESC) நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி நேற்று (31.08.2018) வெள்ளிக்கிழமை இரவு காட்டு பள்ளி மைதானத்தில் துவங்கியது.
இப்போட்டி நேற்று இரவு முதல் தொடங்கி இன்று(01/09/2018) சனிக்கிழமை இரவு இறுதி சுற்றுக்கு வந்து நிறைவுபெற்றது.
இப்போட்டியை என்.எ அப்துல் காதர் அவர்கள் மற்றும் பேரா.செய்யது அகமது கபிர், அனைத்து முஹல்லா நிர்வாகிகள்,
அதிரையில் உள்ள அனைத்து கிளப் WSC, ESC AFFA, அதிரை கிராமவாசிகள், ஜலில், ராவுத்தர், தாஜீதின், மீன்கடை தாஜீதின், ஹமிது, மான் சேக், கோச் அன்வர், இவர்கள் அனைவரும் சிறப்பாக ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில்
◆ முதல் பரிசினை இடமலையூர்.
(ரூபாய் 12,000)
◆ இரண்டாம் பரிசினை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப். (ரூபாய் 10,000)
◆ மூன்றாம் பரிசினை வேடலை
(ரூபாய் 8,000)
◆ நான்காம் பரிசினை அதிரை பிரண்ட்ஸ்
(ரூபாய் 6,000)
அதுமட்டுமின்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடையமும் வழங்கப்பட்டு கவுரவிக்கபட்டது.
பரிசு பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் அணிகளுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாகவும் மற்றும் ESC சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.