Tuesday, April 30, 2024

தேர்தல் பிஸி… கோவை சிறுமி கொலையில் மௌனம் காக்கும் அரசியல் கட்சிகள்…!

Share post:

Date:

- Advertisement -

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, திடீரென காணாமல் போனார்.

இரவு முழுவதும் சிறுமியை தேடிய நிலையில், மறுநாள் காலை வீட்டின் அருகே காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். உடனே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது.

தமிழகத்தையே உலுக்கியுள்ள இச்சம்பவம் குறித்து பொதுமக்களும், நெட்டிசன்களும் தங்களின் கண்டனங்களையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி கடுமையான தண்டனையை உடனே வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் இதுகுறித்து தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ அதன் தலைவர் ஸ்டாலினோ இதுவரை வாய் திறக்கவில்லை. திமுக மட்டுமல்ல பெரும்பாலான அரசியல் கட்சிகள் இவ்விசயத்தில் மௌனத்தையே கடைபிடிக்கின்றனர்.

பெண்ணியம் குறித்து மணிக்கணக்கில் பாடம் எடுக்கும் கட்சிகள் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் எங்கே போயின ?

ஒரு வேளை தேர்தல் பிஸியாக இருக்கிறார்கள் போலும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...