அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நாட்டின் 73-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கிராம கல்வி குழுத்தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான முஹம்மது சரீஃப் தலைமை தாங்கினார். கிராம பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் S.K.M. ஹாஜா முகைதீன் தேசியக்கொடி ஏற்றினார். மேலும் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் நான்காம் இடம் பிடித்த பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதிஃப் அஹமதுவை பாராட்டி, கிராம கல்வி குழுத்தலைவர் முஹம்மது சரீஃப் சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் முஹம்மது இபுராஹீம், ஹனீஃபா, சாகுல் ஹமீது, Z. அப்துல் மாலிக் மற்றும் கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் சிறப்பாக செய்திருந்தார்.