Friday, May 3, 2024

அதிரையில் அதிகரிக்கும் ஸ்லிம்பாடி திருடர்கள்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் நாளொன்றுக்கு நான்கைந்து கடைகளில் திருட்டு சம்பவம் நடப்பதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த வன்னம் இருக்கிறது.

கடந்த ஒரு மாதங்களில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளை குறிவைத்து நடத்தப்படும் நவீன கொள்ளையால் நிலை குழைந்து போயுள்ளனர் வியாபாரிகள்.

சிறிய ஒட்டையானலும் கச்சிதமாக களமிறங்கி களவாடும் ஸ்லிம்பாடி திருடனை பிடிக்க முடியாமல் தினறி வருகிறது அதிரை காவல்த்துறை.

பெரிதாக கடையின் பூட்டை உடைதெல்லாம் தற்போதைய திருடர்கள் தமது கை வரிசையை காட்டுவதில்லை.

காற்றுக்காக வைக்கப்படும் ஒருஅடி கேப் ஆனாலும் நேக்காக உள்ளிரங்கி தேவையானதை ஆட்டய போட்டு அலேக்காக எஸ்க்கேப் ஆகி விடுகின்றனர்.

அந்த வகையில் அதிராம்பட்டிணம் சேது சாலையில் இயங்கி வரும் ஒரு சிற்றுண்டியின் எக்ஸ்ஜாஸ்ட் காத்தாடிக்காக வைக்கப்பட்ட சுமார் 3/4 அடி உயரமே கொண்ட ஓட்டையின் வழியாக உள்ளே சென்ற திருடன் அங்கிருந்த 6 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றுள்ளான்.

இதுகுறித்து உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்,புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கண்கானிப்பு காமிராவின் பதிவுகளை ஆய்வு செய்ததில் பலே கிள்ளாடியான அந்த ஸ்லிம் பாடி திருட்டு ஆசாமி, பதிவாகியிருந்த அத்தனை காட்சிகளையும் அழித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் காவல் துறையினர்.

அதிரையில் தொடர் கதையாகி வரும் திருட்டு சம்பவத்திற்கு முற்றுபுள்ளி வைக்க காவல் துறையினருக்கு வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...