Monday, January 20, 2025

ஒரே கலரில் 9 நாய்கள் ! அதிரை நகராட்சி எல்லையில் இறக்கி சென்ற மர்ம வாகனம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கி விட்டது.

புளுகிராஸ் நாய்களை கொல்ல கூடாது என தடையாணை பெற்றுள்ளதால் நாய்களின் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த ஊசிகள் செலுத்தப்படுகிறது.

இது பல நகராட்சிகள் பேரூராட்சிகள் முறையாக கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றன.

இதனால் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுகாங்காமல் போய் கொண்டுள்ளது. பொதுமக்கள் நாய்கள் குறித்த புகார் அளித்தால் கண் துடைப்பிற்காக அவைகளை பிடித்து அக்கம்பக்கத்து ஊர்களுக்குள் இறக்கி சென்று விடுவது வாடிக்கையாகி வருகிறது.

அதன் வரிசையில் இன்று இரவு அதிரைக்குள் நுழைந்த மர்ம டெம்போ ஒன்று ஒரே கலரில் 9நாய்களை இறக்கி சென்றதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இறக்கியவுடன் புதிய ஊர் என்பதால் எங்கே செல்வது என செய்வதறியாது வரிசையாக ECR சாலையில் அமர்ந்திருந்த காட்சியை தத்ரூபமாக படம்பிடித்து அனுப்பி இருக்கார் பைஷல் !

நகராட்சியின் கவனத்திற்கு குளிர் காலங்களில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகிவிடும் இதனை கருத்தில் கொண்டு நாய்களுக்கு உரிய இனப்பெருக்க தடைக்கான ஊசியை செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img