Sunday, April 28, 2024

திருச்சி விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் இலவசம்: ஏப். 1 முதல் ஆணையமே வசூல்!!

Share post:

Date:

- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விமான நிலைய ஆணையமே, வாகன நிறுத்தக் கட்டணங்களை வசூலிக்கும் என நிலைய இயக்குநர் கே. குணசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது : திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், வாகன நிறுத்த கட்டணத்தை தனியார் நிறுவனம் வசூலித்து வந்தது. தற்போது விமான நிலைய ஆணையமே வாகன நிறுத்தத்தை நிர்வகிக்க உள்ளது.

கட்டண விவரம்:

விமானநிலையத்துக்குள் சொந்த, வாடகை வாகனத்தில் வந்து, 3 நிமிஷங்களுக்குள் பயணிகளை இறக்கிவிட்டு ஏற்றிச்(பிக்-அப்) செல்ல கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆனால், வாடகை வாகனங்களில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமெனில், விமான நிலையத்துக்குள் நுழைவுக் கட்டணமாக ரூ.40 செலுத்த வேண்டும்.

விமானநிலையத்தில் வாகனங்களை நிறுத்த 30 நிமிடங்கள் வரை:

பேருந்து, டிரக், வேன் – ரூ.30,
கார் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் – ரூ.20,
இருசக்கர வாகனம் – ரூ.10

30 நிமிடத்திலிருந்து 2 மணி நேரம் வரை நிறுத்த

பேருந்து, டிரக், வேன் – ரூ.70,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.60,
கார் – ரூ.55,
இருசக்கர வாகனம் – ரூ.15

2 மணி நேரத்துக்கு மேல், 7 மணி நேரம் வரை

நான்கு சக்கர வாகனங்களுக்கு தலா ஒரு மணி நேரத்துக்கு ரூ.10,
இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படும்.

7 மணி நேரம் முதல் 2 நாள்கள் வரை…:

விமான நிலைய வளாகத்தில் 7 மணி நேரத்துக்கு மேல் 24 மணி நேரம் வரை நிறுத்த

பேருந்து, டிரக், வேன் – ரூ.210,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.180,
கார் – ரூ.165,
இருசக்கர வாகனம் – ரூ.45

24 மணி நேரத்துக்கு மேல் 36 மணி நேரம் வரை

பேருந்து, டிரக், வேன் – ரூ.315,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.270,
கார் – ரூ.247.50,
இருசக்கர வாகனம் – ரூ.67.50

48 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு
பேருந்து, டிரக், வேன் – ரூ.420,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.360,
கார் – ரூ.330,
இருசக்கர வாகனம் – ரூ.90

பாதுகாப்புக் காரணங்கள் கருதி 48 மணி நேரத்துக்கு மேல் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்க அனுமதியில்லை.

பயணத்தின்போது 2 நாள்களுக்குள் வர முடியாமல் இருந்தால், அதுகுறித்து வாகனத்தின் ஆர்.சி புத்தக நகலுடன் விமானநிலைய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் கடிதம் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வழியில் நிறுத்தினால் அபராதம் : வாகனங்களை அவற்றுக்குரிய தளத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

வேறு பகுதிகளில் நிறுத்தினால் அபராதம்:
பேருந்து, டிரக், வேன் – ரூ.280,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.240,
கார் – ரூ.220,
இருசக்கர வாகனம் – ரூ.60 அபராதம் வசூலிக்கப்படும்.

இந்த நடைமுறை 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

3 நிமிடம் போதாது: விமான நிலையத்துக்குள் பயணிகளை ஏற்றிஅல்லது இறக்கிவிட வரும் வாகனங்களுக்கு 3 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியே வருவது என்பது இயலாத காரியம். எனவே, பழையபடியே கால அவகாசத்தை 5 நிமிடங்களாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...