Wednesday, March 18, 2026

அதிரையில் தனியார் பேருந்தின் அலட்சியத்தால் படிகளில் பயணம் செய்யும் பெண்கள் : கரணம் தப்பினால் மரணம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை அடுத்த மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், முத்துப்பேட்டை, அம்மாப்பட்டினம், போன்ற ஊர்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிரையில் தொழில் செய்து வருகின்றனர்.

மருத்துவம் மற்றும் பள்ளிக் கல்லூரி சார்ந்த தேவைகளுக்கும் அதிரைக்கு வெளியூர் மக்கள் போக்குவரத்தாக இருந்து வருகின்றனர்.

அதிரையிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வர்த்தகம் முடிந்து வீடு திரும்புவதற்கு பெரும்பாலான மக்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், அதிரையில் உள்ள தனியார் பேருந்து ஒன்று அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவதால் பெரும்பாலான பெண்கள், கல்லூரி மாணவிகள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். படிக்கட்டுகளில் பெண்கள் பயணம் செய்வதால் சில விரும்பத்தகாத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக சக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தனியார் பேருந்துகளின் நடத்துனர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்தி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றாமல் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img