Sunday, May 12, 2024

நாளை காலை வரை மூடப்படுகிறது சென்னை விமான நிலையம்!

Share post:

Date:

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் நாளை காலை 9 மணி வரை மூடப்பட்டுள்ளதுடன், 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவான
மிக்ஜாம் புயல் நாளை முற்பகல் ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கிறது. இது சென்னைக்கு அருகில் வந்து செல்வதால், நேற்று முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. மேலும் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நாளை செவ்வாய்கிழமை காலை 9 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு பயணிகள், சரக்கு, தனி, ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வகையிலான விமானங்களும் வருவதற்கு அனுமதி இல்லை என்று இந்திய விமான அதிகார ஆணையம் (ஏஏஐ) தெரிவித்துள்ளது. 30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சுமார் 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்னை விமான நிலைய விமான ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியிருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்பாக பயணிகள் தங்கள் விமான சேவை குறித்து உறுதி செய்துகொள்ளுமாறு, விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...