Wednesday, May 15, 2024

அதிரையில் மமக வார்டு உறுப்பினரை, ஒருமையில் பேசிய அன்சர்கான் – வாக்கு சேகரிப்பிற்கு NO… மமக காட்டம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு, கிழக்கு மேற்கு என செயல்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்ட பின்பு கிழக்கு மேற்கு பிரச்சினை பூதாகரமாகி வருகிறது.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ச.முரசொலி அதிரை நகரில் வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.

அப்போது முன்னாள அதிரை நகர செயலாளர் இராம குணசேகரனின் தீவிர ஆதரவாளரான அன்சர்கான் தமது பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, மமகவின் 24வது வார்டு உறுப்பினர் மாலீக் என்பவரை ஒருமையில் பேசி கீழே இயங்குமாறு கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல மஜக உள்ளிட்ட கட்சிகளிடமும் கடுமை காட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் மமகவின் அதிரை நகர அவசர கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் கூட்டணி கட்சிகளை மதிக்காத உள்ளூர் நிர்வாகத்திற்கு இனி எந்த ஒத்துழைப்பை வழங்குவதில்லை எனவும், மமக தலைமை வரை புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட உள்ளதாக மமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...