அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு, கிழக்கு மேற்கு என செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்ட பின்பு கிழக்கு மேற்கு பிரச்சினை பூதாகரமாகி வருகிறது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ச.முரசொலி அதிரை நகரில் வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.
அப்போது முன்னாள அதிரை நகர செயலாளர் இராம குணசேகரனின் தீவிர ஆதரவாளரான அன்சர்கான் தமது பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, மமகவின் 24வது வார்டு உறுப்பினர் மாலீக் என்பவரை ஒருமையில் பேசி கீழே இயங்குமாறு கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல மஜக உள்ளிட்ட கட்சிகளிடமும் கடுமை காட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் மமகவின் அதிரை நகர அவசர கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில் கூட்டணி கட்சிகளை மதிக்காத உள்ளூர் நிர்வாகத்திற்கு இனி எந்த ஒத்துழைப்பை வழங்குவதில்லை எனவும், மமக தலைமை வரை புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட உள்ளதாக மமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.