Home » கருத்து சுதந்திரத்தை பறிக்கும் காவல் துறை! கருத்து பதிந்த நூருல் கைது..!!

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் காவல் துறை! கருத்து பதிந்த நூருல் கைது..!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- மாலை முரசு சப் எடிட்டர் அதிரையை சார்ந்த அதிரை பிறை நூருல் விசாரணைக்காக முத்துப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எச்.ராஜா குறித்து தன்னுடைய இணையத்தில் செய்தி வெளியிட்டமைக்காக முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் காலையில் இருந்து தற்போது வரை வைத்திருக்கின்றனர்.இதனை அதிரை எக்ஸ்பிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

ஊடகத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இந்திய தேசத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை மத்திய,மாநில அரசுகள் முடக்கும் வேலையில் இறங்கியுள்ளது போல் தேசம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதும்,கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது, இதனை உடனே அரசு நிறுத்திட வேண்டும். அரசியலமைப்பு வழங்கிய உரிமையின்படி தான் பத்திரிக்கை துறை இயங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மாலை முரசு சப் எடிட்டர் நூருல் உடனே எந்தவித விசாரணையின்றி முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து விடுதலை செய்திட வேண்டும் என்று அதிரை எக்ஸ்பிரஸ் கோரிக்கை வைக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter