தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
வண்டிப்பேட்டை அருகே இயங்கிவரும் மாஸ் பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரியும் சந்திரன் (வயது 40) என்பவர் மதிய உணவுக்கு வீட்டிற்கு சென்றுவிட்டு கடைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி வங்கி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார்.
சந்திரன் அவருக்கு தலையிலும், உடலிலும் பளத்தக்காயங்கள் எற்பட்டது உடனே பொதுமக்கள் உதவியுடன் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.