Home » அதிரையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக மரம் நடும்விழா..!!

அதிரையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக மரம் நடும்விழா..!!

0 comment

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பெருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் இந்திய ஏவுகணை நாயகன் , இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை , சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லாருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்.

அதிராம்பட்டினம் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக இன்று ஜூலை 27 வெள்ளிக்கிழமை .எண்:01 அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரம் கன்றுகளை நட்டு வைத்தும் மாணவர்களுக்கு நோட், பேணா, பென்சில்களும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவநேசன், தஞ்சை மாவட்ட செயலாளர் மதன், அதிராம்பட்டினம் ஒன்றிய செயலாளர் அலெக்சாண்டர் மற்றும் அதிராம்பட்டினம் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter