அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் இன்று 26.10.2018 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வ. விவேகானந்தம் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். கா. சையது அகமது கபீர் நிலவேம்பு குடிநீர் முகாமை துவங்கி வைத்தார். செயலாளர் எம். எப். முஹம்மது சலீம், துணை செயலாளர் மரைக்கா கே.இதிரிஸ் அஹமது, செயற்குழு உறுப்பினர்கள் என். ஷேக்தம்பி, எஸ். அஹமது அனஸ், ஏ. வரிசைமுஹம்மது, மற்றும் டி. நவாஸ்கான், ஏ. கண்ணன், ஏ.கே.சைபுதீன் தூய்மை தூதுவர்கள் ஜெய்லானி, சுபைர் ஆகியோர் கலந்து கொண்டு, பேருந்து நிலையத்தில் 500 பேருக்கும், சேர்மன் வாடி அருகில் 450 பேருக்கும், பழஞ்செட்டிதெருவில் 470 பேருக்கும், பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் 460 பேருக்கும், முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் 650 பேருக்கும் ,கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசலில் 360 பேருக்கும், தரகர்தெரு ஜும்மா பள்ளிவாசலில் 350 பேருக்கும், மொத்தம் 3240 பேருக்கு நில வேம்பு குடிநீர் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர்.