2019 நாடாளுமன்ற தேர்தல் வழக்கத்தை விட உற்சாக தேர்தலாகத்தான் பார்க்கப்படுகிறது.
பாஷிசத்தை வேரருக்க வேண்டிய கட்டாயம் இஸ்லாமிய, கிருஸ்த்தவ, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ள நிலையில் பள்ளிகளின் கோடை விடுமுறையில் வெளியூர்களில் வசிக்கும் அதிரையர்கள் இம்முறை ஊரில் வாக்களிக்க உள்ளனர்.
இவர்களின் வாக்கு எவ்வாறாக இருக்கும் ? வழக்கத்தை விட இம்முறை அதிரையர்கள் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அதிகளவில் வாக்களிக்க உள்ளதால் பாஷிச எதிர்ப்பு அடி பலமாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மறுபுறம் திமுகவின் வாக்கு வங்கியை அமமுக பிரிக்கும் என்ற கவலையில் திமுக உள்ள நிலையில் பாஷிச எதிர்ப்பை பலமாக திமுக தலைமை முன்னெடுத்து வருவது ஆறுதல் அளிக்கும் செயலாக உள்ளன என்கின்றனர் ரரக்கள்.
பொது எதிரியாக உள்ள மோடியை வீழ்த்த இம்முறை வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் என்றும் மாறாக தினகரன் அணி எடப்பாடி, OPS வீழ்த்தவே குறிவைத்துள்ளார்.
எடப்பாடி அன் கோவினர் சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிரியாக மாறியுள்ள நிலையில் பிரதான எதிரியாக உள்ள மோடியை வீழ்த்தும் அணியை ஆதரிப்பதே சரியான தேர்வாகும் என்கின்றனர் பாசிச எதிர்ப்பாளர்கள்.