Sunday, April 28, 2024

தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மனு!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதி, துப்பாக்கி உரிமம் கேட்டு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோவிலை சேர்ந்தவர் பிரவீன்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யாவை காதலித்து கடந்த ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சரண்யாவை, ஆணவக்கொலை செய்ய சிலர் துடிப்பதாகக் கூறி தங்களுக்கு பாதுகாப்பு கேட்டும், தங்களை பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்ககோரியும் காதல் தம்பதி தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இவர்கள், துப்பாக்கி கேட்டு மனு அளித்திருப்பது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...