அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன.
அதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் அதிரை சகோதர்கள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் உள்ள சகோதரர்களிடம் பொருளாதார நிதியுதவிகள் பெறப்பட்டது. வருமானம் இல்லாத பள்ளிகளில் இந்த ஆண்டு அதிரை சகோதர்கள் குழுமதினால் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26/05/2019) பழஞ்செட்டி தெருவில் அமைந்துள்ள ஏ.ஜே பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனால் ஏராளமான இஸ்லாமியர்கள் நோன்பு திறந்து மகிழ்ச்சியடைந்தனர். அதைப்போல் எதிர்வரும் புதன்கிழமை சொரைக்காகொள்ளையில் அமைந்துள்ள உமர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி அதிரை சகோதரர்கள் குழுமதினால் நடத்தப்பட உள்ளன என தெரிவித்துக்கொள்கிறார்கள்.
அதிரையில் வருமானம் இல்லாத பள்ளிகளில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவதற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்காக நிதியுதவி செய்த சகோதரர்களுக்கு அதிரை சகோதர்கள் குழுமம் சார்பில் நன்றிகளும் தெரிவித்துள்ளனர்.