Saturday, April 27, 2024

வேலூர் தொகுதி தேர்தல் – எம்பி வைத்திலிங்கம் தலைமையில் களப்பணியாற்றும் அதிரை அதிமுகவினர் !

Share post:

Date:

- Advertisement -

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததன் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது அங்கு ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனால் தமிழக அரசியல் கட்சிகள் வேலூரில் முகாமிட்டுள்ளன. அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுக முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் என பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலூரில் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் தலைமையில் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி. சுப்ரமணியம், அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை, அதிராம்பட்டினம் நகர துணை செயலாளர் முஹம்மது தமீம், லியாக்கத் அலி, சம்சுதீன், சம்சுல் ஹக், சலாம் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேலும் திமுகவில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் எம்பி வைத்திலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...