தஞ்சாவூர் மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(9.2.2020) மதியம் மல்லிப்பட்டிணம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு மீனவ பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதின் தலைமை வகித்தார்.தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு சங்க தலைவர் ராஜமாணிக்கம்,மாவட்ட செயலாளர் வடுகநாதன் மற்றும் நிர்வாகிகள் அகமது கபீர்,இப்ராகீம்,செல்லக்கிழி முத்து,யாகப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.