அதிராம்பட்டினம் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி ஆசிரியர்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை வாடகை வீட்டை நம்பியே வெளியூர்களில் இருந்து இங்கு வருகின்றனர்.
அவர்களின் தகுதிக்கேற்ப வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா எனும் கொடிய தொற்று உலகை அச்சுருத்தி இந்தியாவையும் ஆட்டி படைத்து வருகிறது.
இதனால் இந்தியாவில் லாக்டவுன் கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு இன்றி மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ள நேரத்தில் அதிரையில் வீட்டு உரிமையாளர்கள் பலர் குடியிருப்பு வாசிகளை வாடகை கேட்டு நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக தெரிகிறது.
தமிழக அரசே குடியிருப்பு வாசிகளிடன் வாடகை கேட்டு நிர்பந்திக்க கூடாது என வலியுறுத்தி உள்ள நிலையில் கட்டிட உரிமையாளர் வாடகை கேட்டு நிர்பந்தம் செய்வது ஏற்புடையது அல்ல என்கின்றனர் நடுநிலையாளர்கள்.