அதிரை : தன்னார்வலர்களின் தாகம் தீர்த்த IRCS !
அதிராம்பட்டினத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
அதே போல் காவல்துறை, அங்கன்வாடி பணியாளர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பினர்,பல்வேறு இயக்கத்தினர் என பலரும் அதிரையில் பம்பரமாக சுழன்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் அதிகாரிகள் முதற்கொண்டு தூய்மை பணியாளர்கள் வரை அனைவரும் சோர்வடைந்து விட கீடாது என்பதற்காக, மாநில ரெட்கிராஸ் தலைமையின் சார்பில் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பழச்சாறு வழங்க கேட்டுகொண்டதோடு அதனை அனைத்து கிளைகளுக்கும் அனுப்பி வைத்தனர்.
அதன் பேரில் தலைமையில் இருந்து பெறப்பட்ட சுமார் 1000 பழச்சாறு பாட்டல்களை அதிரை IRCS சேர்மன் மரைக்கா கே இதிரீஸ் அஹமது தலைமையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டு பழச்சாறுகளை வழங்கினர்.