கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பலர் ஆன்மிக சுற்றுப்பயணம் வந்திருந்தனர். அவ்வாறு அதிரைக்கு வந்திருந்த வெளிநாட்டு ஜமாஅத்தினர் 12 பேரை காவல்துறையினர் ஊரடங்கை காரணம் காட்டி கைது செய்தனர். முறையான விசா ஆவனங்களுடன் வந்திருந்த அவர்களை கைது செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து எஸ்.டி பி.ஐ கட்சி தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, வெளிநாட்டு ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கி, உடனடியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.