தஞ்சை,புதுகை,ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் எ.தாஜுதீன் தலைமையில் புதுகை
மாவட்ட தலைவர் சின்ன அடைக்கலம், பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட கோபி, ராஜா
தஞ்சாவூர் மாவட்டம் ராஜமாணிக்கம், வடுகநாதன், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் கூட்டம்
நடைபெற்றது.
அண்டை மாநிலங்களில் வழங்கப்பட்டதை போல மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கி மானியத் தொகையை பில்லிலேயே கழித்து வழங்கஏற்பாடு செய்து தரவேண்டும் என்ற பல நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்திருந்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அதனை மாற்றி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற அரசின் உத்தரவு மீனவர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்,பழைய நடைமுறையே தொடர வேண்டும்,மீன்வள கொள்கை 2020
வரைவு மசோதாவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்,மீன்வர்களுக்கு டீசலை உற்பத்தி விலைக்கே தரவேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பு தலைவர் ராமேஸ்வரம் என்.ஜெ
போஸ், செயலாளர் சேசுராஜா, பாம்பன் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஜான்சன், மண்டபம்
சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஜாகிர் உசேன் பாலசுப்ரமணியன் ஆகியோரிடம் காணொளியின்
மூலம் கலந்துக்கொண்டனர்.