Saturday, April 27, 2024

அதிரையில் நவீன வசதிகளுடன் கூடிய PFI ஆம்புலன்ஸ் – ஓர் அப்டேட்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்குவது தொடர்பாக சில மாதங்களுக்கு முன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதிலும் அதிரை மக்கள் தாங்களாக மனமுவந்து தாராளமாக நிதியுதவியளித்தனர்.

இதுவரை வசூலான தொகையில் முதற்கட்டமாக ஆம்புலன்ஸிற்கு தேவையான டெம்போ ட்ராவலர் வேன் வாங்குவதற்கான தொகையை இன்று காசோலையாக ஆம்புலன்ஸ் ஏற்பாட்டு குழு தஞ்சாவூர் தேவா ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் வழங்கியது.

நம் மக்களின் தேவையறிந்து நாங்கள் அறிவிப்பு வெளியிட்ட சில மாதங்களிலேயே ஆதரவளித்து,
நிதி தந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இறைவன் அருள்புரிவானாக!

இப்போது வந்துள்ள தொகையை வைத்து முதல் கட்டமாக வேன் வாங்க காசோலை அளித்துள்ளோம். மீதத்தொகை வந்தவுடன் வேனை முழு நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸாக மாற்றும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றோம். இறைவன் நாடினால் வருகிற ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

எனவே நல்லுள்ளம் கொண்டவர்கள் நிதியளித்து அதிரை மக்கள் பயன்பெறும் விதமாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் நமதூருக்கு விரைந்து வர உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஆம்புலன்ஸ் ஏற்பாட்டு குழு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
அதிரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...