Monday, April 29, 2024

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

Share post:

Date:

- Advertisement -

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமானத்வரி துறை அறிவித்துள்ளது.

இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி பான் கார்டு இல்லாமல் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளையும், பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பான் கார்டினை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாத பலரும் இன்று முயன்றனர். இதன் காரணமாக அந்த இணையதளம் முடங்கியது. இதனால் பலரும் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. அதன்படி இதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

அதற்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையென்றால் பான் கார்டு செயலற்றதாக ஆகிவிடும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...