Home » அதிரையிலிருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்து !

அதிரையிலிருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்து !

0 comment

அதிராம்பட்டினத்தில் இருந்து சென்ற தனியார் ஆம்னி பேருந்து சூரப்பள்ளம் அருகே சென்ற போது நிலை தடுமாறி காட்டாற்றுக்குள் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் ஏதும் இல்லாததால் அதிக சேதாரமின்றி தடுக்கப்பட்டது.

இதில் பயணித்த அதிரையை சேர்ந்த ஜாசிக், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஜோதிமணி, ஜெஸ்வந்தி, நிவேதா லெட்சத்தோப்பு நதியா ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பேருந்து மெதுவாக சென்ற நேரத்தில் இவ்விபத்து நேரிட்டதால் லேசான காயங்களுடன் உயிர்ப்பலி ஏதுமில்லாமல் தவிர்க்கப்பட்டது. இவ்விபத்து குறித்து பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter