Home » பட்டுக்கோட்டை கொரோனா மையம்: வேகாத கிச்சடியால் வெடித்தது போராட்டம் !

பட்டுக்கோட்டை கொரோனா மையம்: வேகாத கிச்சடியால் வெடித்தது போராட்டம் !

by
0 comment

வீதியில் இறங்கிய தொற்றாளர்களை அமைதிப்படுத்த அதிகாரிகள் விரைவு !

பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் 120க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு இன்றுகாலை உணவாக கிச்சடி வழங்கியுள்ளனர் அது சுவை மாறிய நிலையில் இருந்துள்ளன இதனால் பெரும்பாலான நோயாளிகள் அதனை தவிர்த்து உள்ளனர்.

இந்த நிலையில் மதிய உணவாக தக்காளி சாதமும,இரவு உணவாக உப்பமாவும் வழங்கி உள்ளனர். இதனால் கொதிதெழுந்த தொற்றாளர்கள் வீதியில் இறங்கி போராடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நோயாளிகளை சமாதானப்படுத்தி மாற்று உணவு வழிவகுத்தனர்.

சமாதான அடைந்த தொற்றாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter