தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் 4 வது வார்டு பகுதியில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பியை வார்டு உறுப்பினர் அபுபக்கர் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.
சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 4வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் மற்றும் மின்கம்பி சேதமடைந்து இருந்தது. இதுகுறித்து ஊராட்சியில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று பொதுமக்கள் கூறினர்.மேலும் அந்த பகுதி வார்டு உறுப்பினர் இன்று(மே 28) காலை நாடியம் உதவிசெயற்பொறியாளரை நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்தார்.கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி உதவி செயற்பொறியாளர் உத்தரவின் பேரில் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை புதியதாக மாற்றினர்.உடனடியாக மின்கம்பத்தை மாற்றம் செய்ய உதவிய அதிகாரிகளுக்கும்,வார்டு உறுப்பினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி கூறினர்.