அதிராம்பட்டினத்தில் 24-10-2021, ஞாயிற்றுக்கிழமை அன்று வெற்றிலைகாரத் தெருவில் உள்ள காய்கறி கடை நைனா முஹம்மத் அவர்களின் வீட்டில் திருமணம் நடைபெற்றது. அன்று திருமணத்திற்கு வருகை புரிந்த பிலால் நகரை சேர்ந்த ஒரு பெண் அணிந்திருந்த நகை (Necklace) தெரியாமல் தவறுதலாக அறுந்து கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த அந்த நகையினை அருகில் இருந்த வேறு ஒரு பெண் எடுத்து இந்த நகை யாருடையது என்று கேட்டுள்ளார். அதனை அருகிலிருந்த வேறு ஒரு பெண் என்னுடைய நகை தான் என்று கேட்டு வாங்கி சென்றுள்ளார். எடுத்த இந்தப் பெண்ணும் எதுவும், எந்த விபரமும் கேட்காமல் என்னுடைய நகை தான் என்று சொன்னதும் அந்தப் பெண்ணிடமே அந்த நகையை கொடுத்துவிட்டதாக எடுத்த பெண் கூறுகிறார். எனவே நகையை வாங்கிச் சென்ற அந்தப் பெண் அந்த நகையை அல்லாஹ்விற்கு பயந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்களை தொடர்பு கொண்டு அல்லது வேறு ஏதாவது பொது இடத்திலோ, பள்ளிவாசல் நிர்வாகத்திடமோ தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் திருப்பித் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பு : அப்படி திருப்பித் தர முன்வராத பட்சத்தில் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, என நகையை தவறவிட்ட குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் தொடர்புக்கு
ஹீஸைன்
8807560664
சிராஜ்
7092614880