அதிராம்பட்டினம் நகர எல்லைகுட்பட்ட பகுதியான சேது சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து சற்று கூடுதலாகவே காணப்படும்.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து எத்தனையோ எச்சரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் விடுத்தும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதே இல்லை.
இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இதே போன்ற ஒரு இன்னல்களை சந்தித்து வரும் பட்டுக்கோட்டை நகராட்சி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளன.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது, மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியான இரண்டு நாட்களுக்கு பிறகும் தொடர் தொந்தரவு செய்து வரும் மாடுகளை பிடித்து அருகில் இருக்கும் காடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற ஒரு தீர்மானத்தை வெளியிட்டு உள்ளது.
இதே போன்ற ஒரு அறிவிப்பை அதிரை நகராட்சியும் கையிலெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள அதிராம்பட்டினம் மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.