அதிரை 12 மற்றும் 13வது வார்டு மக்களுக்காக SDPi – இம்தாத் இந்தியா இணைந்து மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம் நடத்தியது. வாய்க்கால் தெருவில் உள்ள நகர SDPi அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று பயனடைந்தனர். முன்னதாக முகாம் நடைபெறும் அலுவலகத்திற்கு சென்ற 13வது வார்டு SDPi கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கு வந்திருந்த மக்களின் படிவங்களை தாமே பூர்த்தி செய்து வழங்கினார்.