அதிரை நெசவு தெருவில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் குடிசை முழுவதும் தீக்கிரையானது. பொதுமக்கள் சாதுர்யமாக செயல்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வாங்கும்போது அதனை முறையாக ஆய்வு செய்வதுடன் பயன்படுத்தும் போது ஏதும் கசிவு உள்ளதா என்பதையும் பொதுமக்கள் கவனிக்க வேண்டியது அம்சம்பாவித சம்பவத்தை தவிர்க்கும்.