மேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தும் எழுவர் கால்பந்து போட்டி CSI மைதானத்தில் நடந்து வந்தன.
இதன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது, இதில் தஞ்சை அணியினர் மற்றும் அதிரை அஃபா அணியினர் மோதினர்.
முதல் பகுதிநேர ஆட்டத்திற்கு முன் வந்த வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிட்ட அஃபாவிற்கு எதிராக ஒரு கோல் அடித்த தஞ்சை அணியினர் நேர்த்தியான ஆட்ட நுணுக்கங்களை கையாண்டு 4க்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் அஃப்பா அணியினரை வீழ்த்தினர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அதிரையிலிருந்து 300க்கும் மேற்பட்ட நபர்கள் இப்போட்டியை காண சென்றது குறிப்பிடப்பட்டது.
இருப்பினும் இரண்டாம் பரிசான ₹40ஆயிரத்தை வென்றுள்ளன.