Sunday, April 28, 2024

அதிரை : சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு – அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த சோகம் !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் B.com மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார் ஃபவாஸ் வயது 19.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 11மணியளவில் அதிரை எரிப்புறக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.

இதில் மாணவர் முஹம்மது ஃபவாஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார், இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

அதிரை மாணவனின் மரண சம்பவம் அதிரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...