அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம் தொடர்பாக நாளை காலை ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஜமாத்துக்கள், இயக்கங்களின் கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிலையில் உலமாக்கள் அரிவுரை பிரகாரம் நாளை நடைபெறுவதாக இருந்த நகராட்சிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போராட்ட குழுவின் ஒருங்கினைப்பாளர் தமீம் தெரிவித்யிருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, நாளைய தினம் பெண்கள் குழந்தைகள் பெருமளவில் இப்போரட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதை கவனத்தில் கொண்டு அதே நாளன்று எதிர் தரப்பினரும் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு இடம் கொடுக்காமல் நமது போரட்டத்தை வீரியமிக்கதாக நடத்த எத்தனித்து வேறு ஒரு தேதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை (08-01-2024) நடைபெறுவதாக இருந்த அறவழி ஆரப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமீம் கூறியுள்ளர்