அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்வி குழுமம் MKN அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது.
நல்லெண்ணம் கொண்ட அன்றைய நமது முன்னோர்கள் இக்கல்வி கூடங்களை நிறுவி படித்த நல்ல சமூகத்தை உருவாக்கியதன் விளைவு இன்று உலகெங்கும் வியாப்பித்திருக்கிறோம். இந்த கல்வி நிறுவனங்களுக்கு என அசையா சொத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களை வக்பு அதிகாரத்தின் கீழ் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி நிர்வாகத் தேர்வை வக்பு வாரிய அதிகாரிகள் நடத்துவது வழக்கம்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை கடந்த சில மாதங்களாகவே வக்பு வாரியத்தின் நேரடி கண்கானிப்பில் இக்கல்வி நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்யிருக்கிறது. இதன் காரணமாக தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவந்த வாராந்திர விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைக்கு மாற்றாக ஞாயிறு விடுமுறை நாளாகி போனது.
தேர்வு காலங்களில் இது சகஜம் என்றாலும் தேர்வல்லாத நாட்களிலும் ஞாயிறுதான் விடுமுறை நாளாக உள்ளது.
கா.மு ஆண்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஜும்ஆக்களை தவறவிடுகின்றனர்.
இது கல்விக்காக வாரி கொடுத்த வள்ளல்களின் கனவை சிதைக்கும் செயலாக உள்ளது என அப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் கூறுகின்றனர். எனவே MKN ட்ரஸ்ட் குடும்ப நிர்வாகிகள் இவ்விடயத்தில் தலையிட்டு வழக்கம்போல் வெள்ளியன்று விடுமுறையை பெற்று தர மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.