அகில இந்திய ஷரியத் ஐக்கிய கழக ஒருங்கிணைப்பாளர், மொளானா முகம்மது காஷிம் அறிக்கை.
அதிராம்பட்டினம். பிப் 25 இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது.ரமலான் காலங்களில் இஸ்லாமியர்கள் உண்ணா நோன்பிருந்து கடைபிடிக்கும் இத்தருணத்தில், தமிழக அரசு சார்பில்.ஆண்டுதோறும் நோன்பு கஞ்சிக்கான அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது
கடந்த காலங்களில் நோன்பு க்ஞ்சிக்கான அரிசியை வழங்கியதில் சில குளறுபடிகள் இருந்து வருகிறது.குறிப்பாக உணவு கிடங்கில் இருந்து அரிசியை பள்ளிவாசலின் நிர்வாகமே தனியாக வாகனங்களில், கொண்டுவரும் சூழல் உள்ளது இது பள்ளியின் நிர்வாகத்திற்கு கூடுதல் சுமையாக உள்ளது, அரிசியை இலவசமக வழங்கு அரசே அதனை நேரடியாக விநியோகம் செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.
.மேலும், நோன்பு காலம் நெருங்கும் நேரத்தில், அரிசியை காலதாமதமின்றி வழங்கிட தமிழக அரசு ஆனை பிறப்பிக்க வேண்டும் என அகில இந்திய ஷரியத் ஐக்கிய கழக ஒருங்கிணைப்பாளர் மொளலவி காஷிம் ரஹ்மானி தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.