தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிராணி முக்கம் அருகே ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் “ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம் இன்று(08/03/2024) மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது.
இந்த பிரச்சார நிகழ்வு அதிரை கிராணி முக்கம் ஐமுமுக அலுவலகம் அருகில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் ஐமுமுக அமைப்பின் தலைமை கழக பேச்சாளர் அதிரை சேக்உமர்(சத்திய பிரச்சார பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்) பிரச்சார உரை நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஐமுமுக அதிரை நகரம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.