Monday, April 29, 2024

குப்பைக்கிடங்காக உருவெடுத்துள்ள MS நகர் 2 ஆவது வார்டு பகுதி.!!  என்ன செய்கிறார் வார்டு கவுன்சிலர்..?

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சி M.S.நகர் 2 ஆவது வார்டு பகுதி குப்பைக்கிடங்காக உருவெடுத்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் முதல் கொடிய விஷம் கொண்ட பாம்புகளும் பூச்சிகளும் அந்த குப்பைக்கிடங்கில் ஊடுருவதால் உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், M.S.நகர் 2 ஆவது வார்டு பகுதியில் குப்பைகள் சரிவர பெறப்படுவது இல்லையென்றும், ஊராட்சிக்கு என தனியாக 2 குப்பை அள்ளும் வாகனங்கள் இருந்தும் அதற்கென தனி பணியாளர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் எங்கள் பகுதிக்கு குப்பை அள்ளுவதற்கு வருவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இவை குறித்து 2 ஆவது வார்டு கவுன்சிலர் தமீம் அவர்களுடைய தாயார் ரஹ்மத் நிஷா எந்த வித நடவடிக்கையும் எடுத்ததில்லை என்றும் எங்கள் பகுதி முன்னேற்றத்திற்க்கோ எந்த ஒரு பணியையும் மக்களுக்காக மேற்கொள்வது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்த இடத்தில் கிடக்கும் குப்பைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பிரெத்தியோக வீடியோ விரைவில் நமது அதிரை எக்ஸ்பிரஸ் Youtube பக்கத்தில் வெளியிடப்பட உள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...