Monday, April 29, 2024

அதிரையில் புதிதாக திறக்கப்படும் பெண்களுக்கான தனி தொழுகை கூடம்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை புதுத்தெரு சின்ன தைக்காலில் புதிதாக பெண்களுக்கு என தனி தொழுகை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பாத்திமா (ரலி) பெண்கள் தொழுகை கூடம் மற்றும் பெண்கள் மக்தப் மதரஸா என்கிற பெயரில் துவக்கப்பட்டிருக்கும் இந்த தொழுகை கூடம் முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8.30 மணிக்கு இஷா தொழுகையுடன் திறப்படும் இந்த தொழுகை கூடத்தில் ஐந்து வேலை தொழுகையும் ரமலானில் தராவிஹ் தொழுகையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நமதூர் பிலால் நகர் பகுதியில் இதேபோல் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் பெண்களுக்கென தனி இஸ்லாமிய பயிற்சி கூடத்தில் தொழுகை நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது புதிதாக மேலும் ஒரு பெண்களுக்கான தனி தொழுகை கூடம் அமைந்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...