Monday, April 29, 2024

CAA சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து  ஆர்ப்பாட்டம்..! அதிரையர்கள் பங்கேற்க அழைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

2019 ஆண்டு நாடாளுமன்ற அவைகளில்  உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்திய போது இந்தியா முழுவதும் தொடர் சாஹீன்பாக் பாணியிலான போராட்டங்கள் வெடித்தன.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக போராட்டங்களை முடித்து கொண்டனர். பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அழுத்தங்களால் கிடப்பில் போடப்பட்ட சட்டமான சிஏஏவை தூசிதட்டி நேற்று மாலை அதிரடியாக நாடு முழுமைக்கும்  அமல்படுத்தியது ஒன்றிய அரசு.

இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ஒரு நாட்டின் குடியுரிமை தொடர்பான முடிவை மாநில அரசாங்கங்கள் எடுக்க இயலாது என்ற போக்கில் செயல்பட்டுள்ள ஒன்றிய அரசின் கொடுங்கோல் தன்மையை முறியடிக்கும் விதமாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக மனித நேய ஜனநாயக கட்சியின் அதிராம்பட்டினம் கிளை இன்று 12.03.2024 மாலை 7மணியளவில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து போராட்டத்தை துவக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் அதன் பொறுப்பாளர்கள்  இந்த போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...