அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உடட்ட பகுதிகளில் அசுர வேகத்தில், மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சாலைகளை மேம்படுத்த தீவிர அக்கரை காட்டப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் அனைத்து பணிகளையும் முடித்துவிட நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், அதிராம்பட்டினம் நகரில் போடப்படும் அவசர சாலைகள் தரமற்றதாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.
அதன்படி வாய்கால் தெருப் பகுதியில் துரித கதியில் அமைக்கப்படும். சாலை பணிகளுக்காக தார் கலவைகளை ஏற்றி வந்த லாரி நடுத்தெரு கீழ்புறம் பகுதியில் கால்வாயில் விபத்துக்குள்ளாகியது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.