Tuesday, December 2, 2025

அதிரை அரிமா சங்கத்திற்கு கண்கள் தானம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் சமூக ஆர்வலர் வ. விவேகானந்தன் அவர்களின் மாமனாரும், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சா.கி. பாலையன்(வயது-82) அவர்கள் இயற்கை எய்தினார்.

இந்நிலையில் இறந்த பாலையனின் கண்கள் அவரது குடும்பத்தாரின் முழு சம்மதத்துடன் அதிரை அரிமா சங்கத்திற்கு வழங்கபட்டது. அவரின் கண்களை அதிரை அரிமா சங்க பொறுப்பாளர்கள் பேரா. செய்யது அகமது கபீர், சூப்பர் அப்துல் ரஹ்மான், அப்துல் ஜலீல், சாரா அகமது, ஆறுமுகசாமி ஆகியோர் தானமாக பெற்று கும்பகோணத்தில் இயங்கி வரும் மதுரை அரவிந்த் கண் வங்கிக்கு நேரடியாக சென்று ஒப்படைத்தனர்.

மேலும் கண்களை அறுவை சிகிச்சை செய்து எடுத்து தந்த முத்துப்பேட்டை சேரன் மாரிமுத்து அவர்களுக்கு நன்றியும், கண்களை தானமாக தந்த குடும்பத்தினருக்கு நன்றி கலந்த பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img