அதிரையில் தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய கைப்பந்து தொடர் போட்டி பெரிய ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.
இத்தொடர் போட்டியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர், பகல்/இரவு ஆட்டமாக நடைபெற்றது.
முன்னதாக இத்தொடரில் சிறப்பு விருந்தினர்களாக பெரிய ஜுமுஆ பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் தெஹ்லான் மரைக்காயர், தமுமுக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, மாவட்ட செயலாளர் ஷேக் மொய்தீன், WSC நிறுவனர் மாஜித், நூவண்ணா எ நூர் முகமது, அல் அயன் மண்டல பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான், தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி கனி மற்றும் தமுமுக நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.
இறுதியில் இத்தொடரின் முதல் பரிசை பட்டுக்கோட்டை அணியும், இரண்டாம் பரிசை அதிரை ESC அணியும் , மூன்றாம் பரிசை அதிரை ASC அணியும், நான்காம் பரிசை தமுமுக அணியும் தட்டிச்சென்றனர்.