Monday, December 1, 2025

காய்ச்சலா? அழையுங்கள் 104 !!

spot_imgspot_imgspot_imgspot_img

அரசின் சுகாதாரத்துறை சார்பில் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 104ஐ அறிமுகம் செய்துள்ளன.

இதில் காய்ச்சல்,டெங்கு,
மலேரியா, மன நலம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும்.

தற்போது அதிரையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 5நபர்கள் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இவ்வேளையில் இது குறித்த தகவலை நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளம் மாநில சுகாதாரத்துறை கவனத்திற்கு எடுத்து சென்றன.

அதன் பேரில் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள இன்று (08/12/18) காலை முதல் 20நபர்கள் கொண்ட மருத்துவ குழு அதிரையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் மருத்துவ குழுக்களின் அதிகாரி ஒருவர் கூறுகையில், கஜா புயலில் விழுந்த மரங்கள், ஓடுகள் கீற்றுகள் இவைகளில் தேங்கியுள்ள மழை நீரில்தான் ADS கொசு உற்பத்தியாகி இவ்வாறன நோய்கள் பரவி வருவதாக கூறுகிறார்.

மேலும் பொதுமக்கள் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தற்போது ஏற்பட்டு உள்ள குடிநீர் பிரச்சனைகளால் தண்ணீரை சேமித்து வைக்கும் மக்கள் அதனை துணி கொண்டு நன்றாக மூடி வைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...
spot_imgspot_imgspot_imgspot_img