Saturday, May 11, 2024

அதிரை : சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு – அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த சோகம் !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் B.com மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார் ஃபவாஸ் வயது 19.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 11மணியளவில் அதிரை எரிப்புறக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.

இதில் மாணவர் முஹம்மது ஃபவாஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார், இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

அதிரை மாணவனின் மரண சம்பவம் அதிரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...