Monday, February 2, 2026

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?

spot_imgspot_imgspot_imgspot_img
மதுரை தொகுதி ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறைக்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி ஒருவர் நுழைந்ததாக கம்யூ., வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் கூறியதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் கடந்த 18 ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. சித்திரை திருவிழாவைமுன்னிட்டு இரவு 8 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மே மாதம் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஓட்டு பதிவான மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணப்படும் பகுதியான அரசு மருத்துவக்கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதுகாப்பை மீறி பெண் அதிகாரி ஒருவர் அனுமதியின்றி நுழைந்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அறைக்குள் இருந்ததாகவும் முக்கிய ஆவணங்களை சிலவற்றை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த பல்வேறு கட்சியினர் அரசு மருத்துவக்கல்லூரி முன்னர் கூடினர்.போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அறையின் சிசிடிவி காட்சிகளை அரசியல் கட்சியனருக்கு காண்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனகோரிக்கை விடுத்து மா.கம்யூ., அமமுக கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img