Home » அதிரை அல்-அமீன் பள்ளியின் முக்கிய மசூராவிற்க்கு(ஆலோசனை கூட்டத்திற்கு) அழைப்பு..!

அதிரை அல்-அமீன் பள்ளியின் முக்கிய மசூராவிற்க்கு(ஆலோசனை கூட்டத்திற்கு) அழைப்பு..!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பல பொதுமக்களுக்கு உதவும் விதத்தில் அல்-அமீன் பள்ளிவாசல் இயங்கிவருகிறது.

இந்த பள்ளிவாசலில் வெளியூர் செல்பவர்கள் பலர் தொழுகுவது வழக்கமான ஒன்றாகும்.

அதேபோல்,நோன்பு நேரங்களில் ஒவ்வொரு தொழுகைக்கும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் இருக்கும்..

இந்நிலையில், பள்ளிவாசல் விரிவாக்கம் (வெளிப்பள்ளி) கட்டுமான பணி சம்மந்தமான ஆலோசனை கூட்டம் மசூரா வருகிற (20/04/2018) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நோக்கம் மற்றும் அஜந்தாக்கள்:-

1)பள்ளிவாசலின் உள்ளே டைல்ஸ் கல் பதித்து வேலை பார்ப்பது.

2)வெளி பள்ளி வராண்டாவில் டாட்டா சீட்  புதியதாக போடுவது மற்றும் சிறுநீர் கழிப்பிடங்கள் கட்டுவது, பள்ளி சுற்றி உள்ள எல்லைகளில் வேலி அடைப்பது, போன்ற வேலைகள் புதியாதாக தொடங்குவதற்கு நிதி திரட்டவது அதற்கான நபர்கள் நியமிப்பது.

3)ரமலான் மாதத்தில் கஞ்சி காச்சிவது சம்மந்தமாக முடிவு செய்வது மற்றும் வழக்கம் போல் வேலை செய்யும் நபர்களை நியமிப்பது.

4)மக்தப் மதரஸா பிள்ளைகளுக்கு ஆரம்பம் செய்வது சம்மதமாக ஆலோசனை மசூரா செய்யப்பட உள்ளது.

இந்நிலையில்,இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் முஹல்லாஹ் வாசிகள் மற்றும் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter